தமிழ்நாடு

அ.தி.மு.க. ஆட்சியிலும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதா? - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை

Published On 2024-06-25 11:01 GMT   |   Update On 2024-06-25 11:01 GMT
  • 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக ஆட்சியிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டது என்று வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் பேசும் போது "நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது கல்வராயன்மலையில் எங்கு பார்த்தாலும் அடுப்பு எரிந்தது" என்று பேசியது அங்கு இருந்த அதிமுகவினர் இடையே பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News