தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

Published On 2024-08-23 11:56 GMT   |   Update On 2024-08-23 11:56 GMT
  • 4 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும், பூந்தமல்லி கிளை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் கைதான மணிவண்ணன் உள்பட 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கோபி, குமரன், ராஜேஷ் ஆகியோரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட மணிவண்ணன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உத்தரவை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும், பூந்தமல்லி கிளை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News