தமிழ்நாடு (Tamil Nadu)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது

Published On 2024-09-22 15:35 GMT   |   Update On 2024-09-22 15:35 GMT
  • ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபராகன ரவுடி சீசிங் ராஜா கைதாகியுள்ளார்.

தலைமறைவாக இருந்த ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

அண்மையில் சீரிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்திருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்புவை நேற்று டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக ரவுடி புதூர் அப்பு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

Tags:    

Similar News