தமிழ்நாடு (Tamil Nadu)

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்- நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-07-11 10:48 GMT   |   Update On 2024-07-11 10:48 GMT
  • கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார்?
  • கொலையின் பின்னணியில் யார் இருப்பது?

பெரம்பூரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5ம் தேதி இரவு ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இதுவரை 11 நபர்களை செம்பியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்தாண்டு ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் யார் யார் பின்னணியில் உள்ளனர்? என்பது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக கொலையாளிகளை காணொலி மூலம் போலீசார் ஆஜர் படுத்தினர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராவ் வழக்கு: 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை தொடர்ந்து 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில் 5 நாள் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கொலை சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர்களை அழைத்து கொலையாளிகளை நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தவும், கொலையாளிகளுக்கு நிதி உதவி, சட்ட உதவி அளித்தது, கொலையின் பின்னணியில் யார் இருப்பது? என்பது குறித்து விசாக்க திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொன்னை பாலுவுக்கும், கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார் என்பது தொடர்பாகவும் விசாரிக்க முடிவு எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News