தமிழ்நாடு

கருவில் பெண் குழந்தை.. சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு: புதுக்கோட்டையில் பரபரப்பு

Published On 2024-08-15 09:33 GMT   |   Update On 2024-08-15 10:29 GMT
  • தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரி போராட்டம்.
  • போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுக்கோட்டை அருகே கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்தபோது பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பென்னாமராதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரியவந்ததால், கருக்கலைப்பு செய்தபோது பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News