தமிழ்நாடு

கோவையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-03-18 08:21 GMT   |   Update On 2024-03-18 10:05 GMT
  • கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
  • கோவை மாநகர காவல்துறையினர் தனியார் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து கோவை மாநகர காவல்துறையினர் தனியார் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவைக்கு இன்று மாலை பிரதமர் மோடி வரும் நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News