தமிழ்நாடு (Tamil Nadu)

மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ?- சென்னை ஐகோர்ட் கேள்வி

Published On 2024-10-17 12:27 GMT   |   Update On 2024-10-17 12:52 GMT
  • சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக வழக்கு.
  • சுற்றுலாத் துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆஜராக உத்தரவு.

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில், சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, காரணமில்லாமல் அரசை குறை கூற வேண்டாம் என்றும் அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது என்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதம் செய்தார்.

Tags:    

Similar News