தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் இன்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கும் - வெதர்மேன் பிரதீப் ஜான்

Published On 2024-10-14 16:18 GMT   |   Update On 2024-10-14 16:18 GMT
  • சென்னைக்கு வரும் 16 தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வரும் 16 தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், "சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை வெளுத்து வாங்கும்" என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News