தமிழ்நாடு

18,720 பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம்- மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்

Published On 2024-08-17 08:59 GMT   |   Update On 2024-08-17 08:59 GMT
  • விழாவுக்கு பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகிக்கிறார்.
  • விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில், பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.

18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குடியிருப்பு வளாகத்தை திறந்து வைக்கிறார். விழாவுக்கு பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகிக்கிறார்.

விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில் ராஜ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

Similar News