தமிழ்நாடு (Tamil Nadu)

நீட் தேர்வை முன்கூட்டியே எதிர்த்தது திமுக தான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-06-09 09:11 GMT   |   Update On 2024-06-09 09:11 GMT
  • நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினோம்.
  • நாடு தழுவிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம்.

நீட் தேர்வை முன்கூட்டியே எதிர்த்தது திமுக தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நீட் ஆபத்தை முதலில் முன்னறிவித்து அதற்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது திமுக தான்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தோம்.

ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின்படி நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினோம்.

ஆளுநர் தரப்பில் அதிக காலதாமதத்திற்கு பிறகு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக தற்போது நீட் விலக்கு மசோதா காத்திருக்கிறது.

நீட் தேர்வு முரண்பாடுகளால் நாடு தழுவிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிடுகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News