தமிழ்நாடு

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்- எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் கடிதம்

Published On 2024-07-04 15:40 GMT   |   Update On 2024-07-04 15:40 GMT
  • பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில், முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் நடைபெறுகிறது.
  • விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வருகிற 11 மற்றும் 15ம் தேதிகளில் மக்களுடன் முதல்வர் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில், முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

11ம் தேதியன்று தர்மபுரியில் மக்களுடன் முதல்வர் விரிவாக்க நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறேன்.

வரும் 15ம் தேதியன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறேன்.

அன்றைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இந்த விழாவினை தொடங்கி வைப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அனைத்துக்கட்சி எம்.பி.,க்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.

Tags:    

Similar News