தமிழ்நாடு (Tamil Nadu)

வாட்ஸ்-அப் அழைப்பில் பேசி காதலியை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்

Published On 2024-09-27 06:35 GMT   |   Update On 2024-09-27 06:35 GMT
  • பெண்கள் தங்கள் புகைப்படங்களை பிறருக்கு அனுப்பக்கூடாது.
  • வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ், புரொபைல் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றனர்.

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தனுஷ்வெங்கட் (வயது 20) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

அதே நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் பணியாற்றினார். ஒரே நிறுவனத்தில் பணியாற்று வதால் 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தனுஷ்வெங்கட் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறினார். முதலில் அந்த பெண், காதலை ஏற்க மறுத்தார். ஆனால் தனுஷ்வெங்கட், விடாமல் காதல் வலை வீசினார்.

தனுஷ்வெங்கட்டின் ஆசைவார்த்தைகளில் மயங்கி அந்த பெண்ணும் அவரை காதலிக்கத் தொடங்கினார். நேரில் சந்தித்து பேசுவது மட்டுமல்லாமல் வீடுகளுக்கு திரும்பியபிறகு அவர்கள் செல்போனிலும் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

சம்பவத்தன்று இரவு தனுஷ்வெங்கட், அந்த பெண்ணை வாட்ஸ்-அப் அழைப்பில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணை ஆடையின்றி பார்க்க விரும்புவதாக கூறி உள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் தானே உன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், பிறகு ஏன் தயங்குகிறாய் என கூறி கெஞ்சி உள்ளார்.

அந்த பெண்ணும் தனுஷ்வெங்கட்டை நம்பி, அவர் கூறியதுபோல வாட்ஸ்-அப் அழைப்பில் ஆபாசமாக நின்றுள்ளார். அதனை அந்த பெண்ணுக்கு தெரியாமலேயே தனுஷ்வெங்கட் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். அதன்பின் காதலியின் ஆபாச வீடியோவை அடிக்கடி பார்த்து ரசித்துள்ளார்.

அவர் ரசித்தது மட்டுமல்லாமல் தனது நண்பர் ஒருவருக்கும் காதலியின் ஆபாச வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த நண்பர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். காரணம் அவர் அந்த இளம்பெண்ணின் உறவினர் ஆவார். உடனே அவர் ஆபாச வீடியோ குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பெண்ணை கண்டித்தனர். அப்போது தன்னை ஏமாற்றி தனுஷ்வெங்கட் ஆபாச படம் எடுத்து விட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இதையடுத்து பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு ஏற்பட்ட துயர சம்பவம் குறித்து கோவை மேற்கு மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தனுஷ்வெங்கட்டை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் தனுஷ்வெங்கட்டின் நடவடிக்கைகளால் பிடிக்காமல் அவர் காதலித்த பெண் அவரை விலகிச் சென்றுள்ளார். மீண்டும் அந்த பெண், தன்னுடன் பழக வேண்டும் என்று எதிர்பார்த்த தனுஷ்வெங்கட், பெண்ணை மிரட்டும் வகையில் அவரது உறவினரான தனது நண்பருக்கு ஆபாச வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். தற்போது போலீசில் சிக்கிக் கொண்டார்.

இதுபற்றி போலீசார் கூறும்போது தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் பெருகி விட்டன. எனவே பெண்கள் தங்கள் புகைப்படங்களை பிறருக்கு அனுப்பக்கூடாது. வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ், புரொபைல் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News