தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம்- அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு

Published On 2024-09-18 02:37 GMT   |   Update On 2024-09-18 04:26 GMT
  • திமுக பவளவிழா பொதுக்கூட்டம் வரும் 28-ந்தேதி நடைபெற உள்ளது.
  • கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தி.மு.க.வின் 75-வது ஆண்டு பவள விழா, பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் பிறந்தநாள் விழா என 3 விழாக்களையும் ஒன்றாக சேர்த்து தி.மு.க. முப்பெரும் விழாவாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து திமுக பவளவிழா பொதுக்கூட்டம் வரும் 28-ந்தேதி நடைபெற உள்ளது. பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 28-ந்தேதி காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் காஞ்சியில் பவள விழா பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் டெல்லி தலைமைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News