தமிழ்நாடு

பெயரின் பின்னால் சாதிப் பெயரை சேர்க்காதீர்கள்- நாடார் சங்க விழாவில் கனிமொழி எம்.பி வேண்டுகோள்

Published On 2024-09-16 11:19 GMT   |   Update On 2024-09-16 11:19 GMT
  • இம்மண்ணில் சாதி, மதம் என்ற எந்த காழ்ப்புகளும் இருக்கக்கூடாது.
  • இந்த விழா அழைப்பிதழில் பலரின் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் உள்ளது.

சென்னையில் இன்று நாடார் சங்க கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பேசிய எம்.பி. கனிமொழி, "தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஐ.ஏ.அஸ் அதிகாரி படித்துக் கொண்டிருக்கும்போது அவரது வகுப்பு ஆசிரியர் ஒருவர் தமிழ்நாடு மட்டும் தனியாக தெரிகிறது. ஏன் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட மறுக்கிறீர்கள் என்று கூறினார். அப்போது வகுப்பின் பெயர் பட்டியலை எடுத்து உங்கள் பெயர்களை பாருங்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் பெயர்களை பாருங்கள். எங்கள் பெயருக்கு பின்னால் எங்கள் தந்தை பெயரோடு நிறுத்தி கொண்டோம். உங்கள் பெயருக்கு பின்னால் என்ன சாதி என்று வெளிப்படையாக உள்ளது.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இம்மண்ணில் சாதி, மதம் என்ற எந்த காழ்ப்புகளும் இருக்கக்கூடாது. நாம் எல்லோரும் மனிதர்கள், சமமானவர்கள். இந்த விழா அழைப்பிதழில் பலரின் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் உள்ளது. நாம் எல்லோரும் உழைப்பை நம்பக் கூடியவர்கள். அதனால் இப்படி சாதி பெயரைப் போட வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தார். 

Tags:    

Similar News