தமிழ்நாடு (Tamil Nadu)

பருவமழை எச்சரிக்கை: விஷமிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-10-14 09:30 GMT   |   Update On 2024-10-14 09:30 GMT
  • வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கவுள்ளது.
  • சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

இதற்கிடையே, வடகிழக்கு பருவமழையையொட்டி நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவலால் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் மோதியது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழையைப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம்.

சமூக வலைத்தளங்களில் விஷமிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம். அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News