தமிழ்நாடு

அடுத்தடுத்து 2 வீடுகளின் கதவை உடைத்து நகைகள்- பணம் கொள்ளை

Published On 2024-07-10 04:14 GMT   |   Update On 2024-07-10 04:14 GMT
  • தங்க நாணயம், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1,500 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
  • கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூா்:

தஞ்சாவூர் அருகே ஆலக்குடி பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்த 2 வீடுகளின் கதவை உடைத்து நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தஞ்சாவூர் அருகே உள்ள ஆலக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 36). இவர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை அருகே உள்ள கல்விராயன் பேட்டையில் நடத்தினார். விழா முடிந்து அங்கேயே இளங்கோவன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தங்கினார்.

இந்த நிலையில் இளங்கோவனுக்கு அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் போன் செய்து வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு 20 கிராம் தங்கசெயின், 1 கிராம் தங்க நாணயம், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1,500 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதேபோல், இளங்கோவனின் எதிர்வீட்டை சேர்ந்த சரவணன் மகன் மணிகண்டன் என்பவரின் வீட்டின் முன்பக்க கதவையும் உடைத்து ரூ.4,500 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து 2 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News