தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவில் மகாவிஷ்ணு..! விரைவில் விளக்கம் அளிப்பார் என அறக்கட்டளை தகவல்

Published On 2024-09-06 14:15 GMT   |   Update On 2024-09-06 14:15 GMT
  • அரசு பள்ளிகளில் என்சிசி, சொற்பொழிவு உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை.
  • சர்ச்சையை தொடர்ந்து மகா விஷ்ணு தலைமறைவானதாக தகவல் பரவியது.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு சர்ச்சையாக கருத்துகளை பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவன்பில் மகேஷ் கடும் கண்டனம் தெரிவித்ததோடு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு பள்ளிகளில் என்சிசி, சொற்பொழிவு உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்தும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

தொடர்ந்து, மகாவிஷ்ணு விவகாரத்தில், சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள பள்ளியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, இந்த சர்ச்சையை தொடர்ந்து மகா விஷ்ணு தலைமறைவானதாக தகவல் பரவியது.

இந்நிலையில், மகா விஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருப்பதாகவும், இப்பிரச்னை குறித்து விரைவில் அவர் விளக்கம் அளிப்பார் எனவும் திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News