தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் இயங்கும் சட்டவிரோத கன்சல்டன்சிகள்- போலீசார் அதிரடி சோதனை

Published On 2024-09-25 16:36 GMT   |   Update On 2024-09-25 16:36 GMT
  • உரிய அனுமதியின்றி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக நடத்தப்படும் கன்சல்டன்சிகள் மீது நடவடிக்கை.
  • சட்டவிரோத கன்சல்சிக்கு தொடர்புடையவர்களை அழைத்துச் சென்று விசாரணை.

சென்னையில் 10க்கும் மேற்பட்ட சட்டவிரோத கன்சல்டன்சி தொடர்பான இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

உரிய அனுமதியின்றி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக நடத்தப்படும் கன்சல்டன்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

70க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத கன்சல்சிக்கு தொடர்புடையவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News