தமிழ்நாடு (Tamil Nadu)

பத்திரப்பதிவில் முறைகேடு.. டிஐஜி ரவீந்திரநாத் கைது - சிபிசிஐடி போலீஸ் அதிரடி

Published On 2024-09-25 17:41 GMT   |   Update On 2024-09-25 17:41 GMT
  • சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • போலி பத்திரப்பதிவுக்கு டிஐஜி ரவீந்திரநாத் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை காந்தம்மாள் என்பவர் பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் மாற்றியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் தென் சென்னையில் பணியாற்றியபோது தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவரணம் மூலம் மாற்றியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

பத்திரப் பதிவு உதவியாளர்கள், சார்பதிவாளர் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் போலி பத்திரப்பதிவுக்கு டிஐஜி ரவீந்திரநாத் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. மேலும் எட்டு முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எனவே அவர் மீதான வழக்கின் அடிப்படையில் தற்போது டிஐஜி ரவீந்திரநாத்தை சென்னை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்

Tags:    

Similar News