தமிழ்நாடு (Tamil Nadu)

கள்ளச்சாராயத்துக்கு காரணமாகும் மெத்தனால் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்- ஜவாஹிருல்லா கோரிக்கை

Published On 2024-06-21 07:06 GMT   |   Update On 2024-06-21 07:06 GMT
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் துல்லியமாக விசாரிக்கப்பட வேண்டும்.
  • அனைத்து நிலை அரசு ஊழியர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும்.

சென்னை:

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் துல்லியமாக விசாரிக்கப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்குக் காரணமான காவல் துறை உட்பட அனைத்து நிலை அரசு ஊழியர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும்.

சாதாரணப் பணியிட மாற்ற நடவடிக்கை மட்டும் போதாது. இந்தச் சம்பவத்திற்குத் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தனாலை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News