தமிழ்நாடு (Tamil Nadu)

கள்ளச்சாராய பலி... ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மட்டும் மாறவில்லை

Published On 2024-06-20 08:28 GMT   |   Update On 2024-06-20 08:28 GMT
  • ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வதும், போலீசாரை சஸ்பெண்ட் செய்வதும் மட்டும் தீர்வாகாது.
  • எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ் என அனைவர் ஆட்சி காலத்திலும் கள்ளச்சாராய பலிகள் நிகழ்ந்துள்ளன.

கள்ளக்குறிச்சி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத காவல்துறையினர் கைது செய்யப்பட வேண்டும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என தொடர்புடையோர் யாரையும் விடக்கூடாது.

* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

* ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வதும், போலீசாரை சஸ்பெண்ட் செய்வதும் மட்டும் தீர்வாகாது.

* கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்களின் குடும்பங்களை அரசு காப்பாற்ற வேண்டும்.

* ஆட்சிகள் மாறினாலும் கள்ளச்சாராய காட்சிகள் மட்டும் மாறவில்லை.

* எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

* எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ் என அனைவர் ஆட்சி காலத்திலும் கள்ளச்சாராய பலிகள் நிகழ்ந்துள்ளன.

* அரசியல் பின்புலம் இல்லாமல் கள்ளக்குறிச்சியில் இத்தனை துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டிருக்க முடியாது.

* முதலமைச்சர் பதவி விலகுவது இப்பிரச்சனைக்கு தீர்வாகாது. கள்ளச்சாராய விற்பனை தடுக்கப்பட வேண்டும்.

* முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என இபிஎஸ் கூறுவது வெறும் அரசியல் என்று கூறினார்.

Tags:    

Similar News