தமிழ்நாடு

கபினி அணையின் நீர்மட்டம் 78 அடியை எட்டியது

Published On 2024-07-02 04:31 GMT   |   Update On 2024-07-02 04:31 GMT
  • தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
  • மேட்டூர் அணையில் தற்போது 11.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 124,80 உயரம் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 8787 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 96.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 526 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போல் 84 அடி உயரம் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 269 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 78.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1542 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளுக்கும் வினாடிக்கு 20ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 876 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 39.70 அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 11.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News