தமிழ்நாடு (Tamil Nadu)

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி

Published On 2024-06-19 07:29 GMT   |   Update On 2024-06-19 07:54 GMT
  • கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
  • கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அப்பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 5 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News