தமிழ்நாடு

பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கவில்லையா?- குஷ்புவுக்கு கனிமொழி பதிலடி

Published On 2024-08-17 07:28 GMT   |   Update On 2024-08-17 07:28 GMT
  • மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளோம்.
  • மருத்துவ மாணவி கொலை குறித்து நான் கருத்து கூறவில்லை என பாஜகவை சேர்ந்த குஷ்பு கூறி உள்ளார்

சென்னை:

மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பி கனிமொழி ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளோம்.

மருத்துவ மாணவி கொலை குறித்து நான் கருத்து கூறவில்லை என பாஜகவை சேர்ந்த குஷ்பு கூறி உள்ளார். குஷ்புவை முதலில் சமூக வலைதளத்தை பார்க்க சொல்லுங்கள், நான் கருத்து கூறி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News