தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

Published On 2024-07-08 09:21 GMT   |   Update On 2024-07-08 09:21 GMT
  • சென்னை ஐகோர்ட்டில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

சென்னை:

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அந்த சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அப்போது இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சென்னை ஐகோர்ட்டில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வக்கீல்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் ஐகோர்ட்டு வளாகத்தில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக வக்கீல்கள் பலர் இன்று வழக்கு விசாரணைக்காக ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News