தமிழ்நாடு

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.. வீடியோ வெளியிட்ட மகாவிஷ்ணு

Published On 2024-09-06 16:57 GMT   |   Update On 2024-09-06 16:57 GMT
  • மகா விஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருப்பதாக தகவல்.
  • திருப்பூரில் உள்ள அறக்கட்டளையில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

சென்னை அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியது சர்ச்சையான நிலையில் மகாவிஷ்ணு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

மகா விஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருப்பதாகவும், இப்பிரச்னை குறித்து விரைவில் அவர் விளக்கம் அளிப்பார் எனவும் திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, நாளை நேரில் வந்து விளக்கம் தருகிறேன் என மகாவிஷ்ணு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், "சென்னை பள்ளிகளில் நிகழ்ச்சிகள் முடிந்த மறுநாளே ஆஸ்திரேலியா வந்து விட்டேன்.

எனக்கு இந்தியா உள்பட 6 இடங்களில் அலவலகம் உள்ளது. நாளை மதியம் 1.10 மணிக்கு சென்னை வருகிறேன். தன்னை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.

வழக்கமாக நான் தொடர்ந்து இந்தியாவில் இருப்பதில்லை. திருப்பூரில் உள்ள அறக்கட்டளையில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

போலீசார் அவர்களின் கடமையை செய்து கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் 3 ஆண்டுகளுக்கு என்னால் தங்க முடியும். வரும் 8ம் தேதி சிங்கப்பூரிலும், அதன் பிறகு துபாய், மொரீசியசிலும் எனக்கு நிகழ்ச்சிகள் உள்ளன.

காவல்துறைக்கு எந்த கடினமும் இல்லாமல் செப்டம்பர் 7ம் தேதி பிற்பகல் 1.10 மணிக்கு சென்னையில் இருப்பேன். அமைச்சர் அன்பில் மகேஷின் கோபம், சீற்றத்தை என்னால் பார்க்க முடிகிறது.

என்னை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கிறேன்" என்றார்.

Tags:    

Similar News