தமிழ்நாடு

மருத்துவ படிப்பு கலந்தாய்வு: விருப்ப இடங்களை தேர்வு செய்த 20 ஆயிரம் பேர்

Published On 2023-08-05 03:24 GMT   |   Update On 2023-08-05 03:24 GMT
  • பொது கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது.
  • இடஒதுக்கீடு இறுதி முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது.

சென்னை:

2023-24-ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 25-ந் தேதி தொடங்கியது.

பொது கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. கலந்தாய்வில் பங்குபெற்று விருப்ப இடங்களை 20 ஆயிரத்து 83 மாணவ-மாணவிகள் தேர்வு செய்து இருக்கின்றனர்.

இடஒதுக்கீடு இறுதி முடிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட உள்ளது.

Tags:    

Similar News