தமிழ்நாடு (Tamil Nadu)

உலகின் பெரிய நிறுவனத்திற்கு தமிழகம் முகவரி- மு.க.ஸ்டாலின்

Published On 2024-09-28 06:39 GMT   |   Update On 2024-09-28 06:39 GMT
  • தமிழகம் மீது டாடா வைத்துள்ள நம்பிக்கைக்கு பெருமிதம் கொள்கிறோம்.
  • பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தொழிற்பூங்காவில் டாடா கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:

* தொழில் நிறுவனத்தை விரிவுபடுத்தும் டாடாவின் பணியை பார்த்து மகிழ்ச்சியடைகிறோம்.

* டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட வாகன உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

* ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் டாடா கார் உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது.

* உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்திய நிறுவனங்களுக்கும் தமிழகம் தான் முதல் முகவரியாக உள்ளது.

* தமிழகம் மீது டாடா வைத்துள்ள நம்பிக்கைக்கு பெருமிதம் கொள்கிறோம்.

* தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும்போது உங்களுடன் சேர்ந்து நாங்களும் பெருமைபடுகிறோம்.

* இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் முக்கியமான டாடா நிறுவனம் உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.

* டாடா நிறுவனத்திற்கும் தமிழகத்திற்கும் பல ஆண்டு கால தொடர்பு உள்ளது.

* உலகளவில் செயல்படும் டாடா நிறுவனம் தமிழகத்தின் ராணிப்பேட்டையில் அமைவது கூடுதல் மகிழ்ச்சி.

* பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

* எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News