தமிழ்நாடு (Tamil Nadu)

நெய்வேலி சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி பலி- உறவினர்கள் போராட்டம்

Published On 2024-07-08 06:20 GMT   |   Update On 2024-07-08 06:20 GMT
  • என்எல்சி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெய்வேலி:

நெய்வேலி என்எல்சி நிறுவனம் 2-வது சுரங்கம் நிலக்கரி வெட்டி எடுக்கும் கன்வெயர் பகுதியில் சொசைட்டி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் அன்பழகன். இவர் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் தெற்கு வெள்ளூர் பகுதியில் வசித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் அன்பழகன் பணிக்கு சென்று பணியிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

இது குறித்து என்எல்சி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த அன்பழகனின் உறவினர்கள் என்.எல்.சி. 2-வது சுரங்கத்துக்கு திரண்டுவந்தனர். அவர்கள் ஒப்பந்த தொழிலாளி அன்பழகன் சாவுக்கு நீதிகேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

Tags:    

Similar News