தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை

Published On 2024-09-24 02:10 GMT   |   Update On 2024-09-24 02:11 GMT
  • தமிழகத்தில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
  • இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஏழுகிணறு, நீலாங்கரை, வெட்டுவாங்கேணி மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News