தமிழ்நாடு

கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசினார். அருகில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளார்.

மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பா.ஜ.கவுக்கு தோல்வியை தான் மக்கள் பரிசாக வழங்குவார்கள்- சேகர்பாபு

Published On 2024-03-05 11:20 GMT   |   Update On 2024-03-05 11:20 GMT
  • நரேந்திர மோடி தனது கட்சியை நோட்டாவுக்கு இணையாக வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக தான் மாதம் ஒரு முறையாவது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.
  • அவருக்கு தான் தி.மு.க . ஆட்சியை பார்த்து புளியை கறைத்து கொண்டு உள்ளது.

அம்பத்தூர்:

மக்களின் முதல்வர் மனிதநேயர் திருநாள் என்னும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலையில் அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர் கவுன்சிலர் டி.எஸ்.பி.ராஜகோபால் தலைமையில் கொரட்டூரில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் சத்யராஜ், பாடலாசிரியர் பா.விஜய், மற்றும் தி.மு.க . வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில்,

நரேந்திர மோடி தனது கட்சியை நோட்டாவுக்கு இணையாக வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக தான் மாதம் ஒரு முறையாவது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். இந்தாண்டு மட்டும் 6 -வது முறையாக பிரதமர் தமிழகத்திற்கு வந்துள்ளார்.

யாருக்கு வயிற்றில் புளியை கறைத்து தன்னுடைய கட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ப தற்காக தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறாரோ அவருக்கு தான் தி.மு.க . ஆட்சியை பார்த்து புளியை கறைத்து கொண்டு உள்ளது. பேரிடர் காலங்களில் நிவாரண தொகை வழங்காமல் வஞ்சித்த பிரதமருக்கு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தோல்வியை வழங்கி தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார். நிகழ்ச்சியில் ஜோசப் சாமுவேல் எம் .எல்.ஏ ., அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர். நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News