தமிழ்நாடு (Tamil Nadu)
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: விழா கமிட்டியினர் போராட்டம்
- மாற்று தேதிகளில் ஜல்லிக்கட்டை நடத்த விழா கமிட்டியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் விழா கமிட்டியினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர், இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். மாற்று தேதிகளில் நடத்தவும் விழா கமிட்டியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் விழா கமிட்டியினர் கடும் அதிருப்தி அடைந்தனர். விழா கமிட்டியினரும், பொதுமக்களும் அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏறபட்டது.