தமிழ்நாடு (Tamil Nadu)

விஜய்யின் த.வெ.க. மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய காவல்துறை

Published On 2024-09-25 18:31 GMT   |   Update On 2024-09-25 18:31 GMT
  • முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.
  • 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை நடத்துவதற்காக கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்ட காவல்துறை விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்காக அனுமதியை வழங்கியுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மேலும் 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக மாநாட்டிற்கு மது அருந்தி வரக்கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளைத் தொண்டர்களுக்கு விஜய் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News