தமிழ்நாடு (Tamil Nadu)
- வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது
- ஒட்டிவாக்கம், தாங்கி, ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை மற்றும் அவைகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும்.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையடுத்து நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரையில் வாலாஜாபாத், புத்தகரம், ஊத்துக்காடு, நத்தாநல்லூர், தேவரியம்பாக்கம், வாரணவாசி, தென்னேரி, கட்டவாக்கம், புளியம்பாக்கம், சங்கராபுரம், தொள்ளாழி, களியனூர், தம்மனூர், அவளுர், அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், வரதராஜபுரம், வெங்குடி, பூசிவாக்கம், ஒட்டிவாக்கம், தாங்கி, ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை மற்றும் அவைகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும்.
இந்த தகவலை செயற்பொறியாளர் பிரசாந் தெரிவித்து உள்ளார்.