தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. ஆட்சியர் அறிவிப்பு

Published On 2024-10-18 02:11 GMT   |   Update On 2024-10-18 02:13 GMT
  • இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இதைத் தொடர்ந்து, சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓ.எம்.ஆர். சாலை, கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

காலை முதலே மழை பெய்து வருவதை அடுத்து சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வழக்கம்போல் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News