தமிழ்நாடு

5 நாட்களுக்கு பிறகு கடலுக்கு புறப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்

Published On 2024-06-22 04:23 GMT   |   Update On 2024-06-22 04:23 GMT
  • மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 17-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
  • ராமேசுவரம், பாம்பன் மீன்பிடி இறங்கு தளங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

ராமேசுவரம்:

தமிழகம் முழுவதும் கடந்த வாரம் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ராமேசுவரத்திலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் 60 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.

இந்த நிலையில் வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரினை பகுதிகளில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்தது.

இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 17-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட மீனவ நலத்துறையும் அனுமதி டோக்கன் வழங்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் காற்றின் வேகம் குறைந்து கடல் இயல்பு நிலைக்கு மாறியது. இதையடுத்து இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர். இதனால் ராமேசுவரம், பாம்பன் மீன்பிடி இறங்கு தளங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News