தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

Published On 2024-08-19 09:34 GMT   |   Update On 2024-08-19 09:34 GMT
  • 35,000 ரேஷன் கடை பணியாளர்கள் செப்.5-ல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
  • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் செப்.5-ந்தேதி ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் 35,000 ரேஷன் கடை பணியாளர்கள் செப்.5-ல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் அறிவித்துள்ளார்.

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News