தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னைக்கு ரெட் அலர்ட்: சுழற்சி முறை.. 24 மணி நேரமும் பணியாளர்கள் இருக்கனும்.. ஆணையர் உத்தரவு

Published On 2024-10-14 07:26 GMT   |   Update On 2024-10-14 08:30 GMT
  • சென்னையில் அதி கனமழைக்கான எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதிப்படுத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியான தகவல்களில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். சென்னைக்கு நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் 21 ஆயிரம் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News