தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டது

Published On 2024-10-16 16:22 GMT   |   Update On 2024-10-16 16:22 GMT
  • இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
  • இன்று சென்னையில் எங்கும் மழை பெய்யவில்லை.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

நாளை அதிகாலை தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- புதுச்சேரி இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதனால் இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று சென்னையில் எங்கும் பரவலாக மழை பெய்யவில்லை.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இம்மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News