தமிழ்நாடு

தூத்துக்குடி நர்சிங் கல்லூரி மாணவி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்

Published On 2022-12-09 10:52 GMT   |   Update On 2022-12-09 10:52 GMT
  • மாணவி மரணம் தொடர்பாக தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • வாலிபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உறவினர்கள் வலியுறுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி லேபர் காலனியை சேர்ந்தவர் சரவணகுமார். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஹரிணி (வயது 20). இவர் தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் ஹரிணி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவிக்கும் விருதுநகரை சேர்ந்த ஒரு வாலிபருக்கு பழக்கம் இருந்ததாகவும், அந்த வாலிபர்தான் ஹரிணியின் சாவுக்கு காரணம் என்றும் புகார் தெரிவித்தனர்.

அந்த வாலிபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்களுடன் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி இன்று 2-வது நாளாக மாணவி உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவியின் உடல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News