தமிழ்நாடு

சிறார்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம்... 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது

Published On 2024-05-29 13:01 GMT   |   Update On 2024-05-29 13:01 GMT
  • வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும்
  • இந்த விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது.

அதனால் 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Tags:    

Similar News