அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு- சென்னை மாநகராட்சி
- ஊதிய உயர்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 3.07 கோடி கூடுதல் செலவாகிறது.
- அம்மா உணவக உட்கட்டமைப்பு மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னை மாநகராட்சி முழுவதும் 392 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பணிபுரியும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு தினகூலி வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ள அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 3.07 கோடி கூடுதல் செலவாகிறது.
அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி உயர்த்தி வழங்கப்படுகிறது. சமீபத்தில் அம்மா உணவக உட்கட்டமைப்பு மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.