தமிழ்நாடு
மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற மாநில அரசுக்கு உரிமை உண்டு- சசிகலா
- மத்திய அரசும், மாநில அரசும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கக்கூடாது.
- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது.
சென்னை:
சென்னையில் இன்று சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல அரசுகள் உள்ளது. மத்தியில் ஒரே ஒரு ஆட்சி தான் இருக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்தில் வசித்து வருபவர்களும் அரசுக்கு வரி கட்டுகிறார்கள். இதனால் நமக்கு தேவையானவற்றை இங்குள்ள மாநில அரசு 100 சதவீதம் கேட்டு பெற உரிமை உள்ளது.
மக்கள் நம்மை நம்பி தான் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கக்கூடாது. சண்டை போடுவதற்காக மக்கள் ஓட்டு போடவில்லை.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. தமிழ்நாடு போலீஸ் துறையில் நல்ல அதிகாரிகள் உள்ளனர். அவர்களை சரியாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.