தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க.வை பலப்படுத்தி 2026-ம் ஆண்டில் நிச்சயம் ஆட்சி அமைப்போம்: சசிகலா

Published On 2024-10-17 17:49 GMT   |   Update On 2024-10-17 17:49 GMT
  • அ.தி.மு.க. தற்போது சரியாக இல்லை.
  • அதிமுகவில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டியுள்ளன.

சென்னை:

சென்னையில் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

அ.தி.மு.க. தற்போது சரியாக இல்லை. அ.தி.மு.க.வில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டியுள்ளன.

கட்சியை வலுப்படுத்தி 2026-ல் நிச்சயம் ஆட்சி அமைப்போம். சொத்து பிரிப்பது போல் அரசாங்கத்தைப் பிரித்துள்ளார்கள்.

பெரிய பிள்ளைக்கு இது, கடைக்குட்டி பிள்ளைக்கு இது என அந்தக் காலத்தில் பெரியவர்கள் சொத்து பிரிப்பார்கள். அதேபோல் தான் தற்போது இவர்கள் அரசாங்கத்தைப் பிரித்து வைத்துள்ளார்கள்.

பல்லாயிரம் கோடி ரூபாய் சென்னையினுடைய வளர்ச்சிக்காக செலவு செய்து உள்ளோம் என அரசு சொல்கிறது. ஆனால் அப்படி செலவு செய்திருந்தால் ஒரு நாள் மழைக்கு எப்படி சென்னை இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஏழை மக்களுக்கோ அல்லது நடுத்தர மக்களுக்கு உதவி செய்யக்கூடிய அரசாக திமுக அரசு செயல்படவில்லை.

எந்த வேலைகளையும் சரிவர செய்ய முடியவில்லை. நான் சொல்வதைக் கேட்டு இப்போதாவது இதனை சரிசெய்யுங்கள்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கோடை நாட்களிலேயே சென்னையில் உள்ள 3 கூவம் ஆறுகளையும் தூர்வாரி விடுவோம். ஆனால் ஜெயலலிதா செய்ததை தி.மு.க.வினர் செய்யவில்லை.

ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தியதே தவிர, மழை வெள்ளத்திலிருந்து மக்களைக் காக்க தவறிவிட்டது என தெரிவித்தார்.

Tags:    

Similar News