தமிழ்நாடு

போலீஸ் நிலையம் முன்பு 9-ம் வகுப்பு மாணவி போராட்டம்

Published On 2023-11-29 08:29 GMT   |   Update On 2023-11-29 08:29 GMT
  • வாலிபர் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்ததால் வாலிபர் மீது போலீசில் புகார் செய்தனர்.
  • டி.ஐ.ஜி முத்துசாமி மாணவி பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டதை கண்டு தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

வேலூர்:

வேலூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை காதலித்து வந்தார்.

வாலிபர் மாணவியை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் வாலிபரை கண்டித்தனர்.

இருப்பினும் வாலிபர் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்ததால் வாலிபர் மீது நேற்று மாலை வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று மாணவி தனது பெற்றோருடன் தெற்கு போலீஸ் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக வந்த டி.ஐ.ஜி முத்துசாமி மாணவி பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டதை கண்டு தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். மாணவியை சமாதானம் செய்தனர். பின்னர் மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News