தமிழ்நாடு

சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை- புதுக்கோட்டை மாவட்டத்தில் 500 ஏக்கர் வாழை சாய்ந்தன

Published On 2023-06-08 05:34 GMT   |   Update On 2023-06-08 05:34 GMT
  • மா, பலா, பூக்கள் உள்ளிட்ட பணப்பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்பயிர்கள் மண்ணோடு சாய்ந்தது.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, நெடுவாசல், மரமடக்கி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கறம்பக்குடி தாலுகாவிற் குட்பட்ட வாணக்கண்காடு, பெரியவாடி, கருக்காக் குறிச்சி, மாங்கோட்டை, நம்பன்பட்டி, மழையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக அளவில் வாழை சாகுபடி செய்வது வழக்கம்.

மேலும் மா, பலா, பூக்கள் உள்ளிட்ட பணப்பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டது. வாழை பயிரில் தார்கள் விட்டு மகசூல் கிடைக்கும் நேரத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இந்த சூறாவளி காற்றில் ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் இருந்த வாழை மரங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒடிந்து சாய்ந்தது. அதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்பயிர்கள் மண்ணோடு சாய்ந்தது.

இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சூறாவளி காற்றுடன் மழையும் பெய்ததால் வாழை மரங்கள் முழுவதுமாக சேதமடைந்ததை இரவே சென்று பார்வையிட்ட விவசாயிகள் தங்களின் உழைப்பு முற்றிலுமாக வீணானதாக பெரும் கவலை அடைந்தனர்.

எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் தாமதப்படுத்தாமல் பார்வையிட்டு கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு போதிய இழப்பிடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News