தமிழ்நாடு (Tamil Nadu)

முதல்ல சாலையை சரி பண்ணுங்க, அப்புறம் சுங்க வரி வாங்கலாம்.. எம்.பி. தயாநிதி மாறன் காட்டம்

Published On 2024-10-02 13:39 GMT   |   Update On 2024-10-02 13:39 GMT
  • சாலை மோசமாக உள்ளதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது.
  • சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சென்னை :

மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (NH 48) நீண்ட நாட்களாக நடக்கும் விரிவாக்காப் பணிகளாலும், மிக சோமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

சாலை மோசமாக உள்ளதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது. சாலையை முறையாக பராமரித்த பிறகே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News