தமிழ்நாடு (Tamil Nadu)

தென்மாவட்டங்களுக்கு செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

Published On 2023-12-19 04:52 GMT   |   Update On 2023-12-19 04:52 GMT
  • பல வீடுகளின் முதல் தளம் வரை வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வீடுகளின் முதல் தளம் வரை வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களுக்கு செல்கிறார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவி வழங்குகிறார்.

Tags:    

Similar News