தமிழ்நாடு

அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களை காத்திருக்கலாம்... எடப்பாடி பழனிசாமி

Published On 2023-12-19 10:11 GMT   |   Update On 2023-12-19 10:11 GMT
  • தூத்துக்குடி மக்கள் வெளியில் கால் வைக்க முடியாத அளவுக்கு தவிப்பில் உள்ளனர்.
  • மக்களைக் கேட்டால்தான் மீட்புப்பணிகள் குறித்து உண்மை நிலை தெரியவரும்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை குறைத்திருக்கலாம். வானிலை மைய அறிவுரை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களை காத்திருக்கலாம்.


தூத்துக்குடி மக்கள் வெளியில் கால் வைக்க முடியாத அளவுக்கு தவிப்பில் உள்ளனர். மக்களைக் கேட்டால்தான் மீட்புப்பணிகள் குறித்து உண்மை நிலை தெரியவரும் என்றார்.

Tags:    

Similar News