தமிழ்நாடு

துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜக்தீப் தன்கர் வெற்றி பெற ஜி.கே.வாசன் வாழ்த்து

Published On 2022-07-18 04:50 GMT   |   Update On 2022-07-18 04:50 GMT
  • எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த ஜக்தீப் தன்கர் சிறந்த வழக்கறிஞராக திகழ்ந்தவர்.
  • அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் மிகுந்த அனுபவம் கொண்டவர்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, மேற்கு வங்க கவர்னராக பணியாற்றும் ஜக்தீப் தன்கரை தேர்ந்தெடுத்துள்ளது. அவரை தேர்வு செய்த பா.ஜ.க.-என்.டி.ஏ. கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன்ஜூனு மாவட்டத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த ஜக்தீப் தன்கர் சிறந்த வழக்கறிஞராக திகழ்ந்தவர். மத்திய அரசில் இணை அமைச்சராக பதவி வகித்து, விவசாயிகள், இளைஞர்கள், முன்னேற்றத்திற்காக உழைத்தவர். மூத்த அரசியல்வாதி. நேர்மையானவர். அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் மிகுந்த அனுபவம் கொண்டவர்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜக்தீப் தன்கர் வெற்றிபெற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News